இணையதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் அடையளம் திருட்டுப் போவது சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது . இதனால் பெரும் பொருள் இழப்புடன் , மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது . செய்யாத குற்றத்துக்கு சில சமயங்களில் அவர்களே பொறுப்பேற்க நேரிடுகிறது . வளர்ந்த நாடுகளிலும் , வளரும் நாடுகளிலும் ,இணையதளங்களில் இந்த அடையாள திருட்டு அதிகரித்து வருகிறது . அடையாள திருட்டு மூலம் மோசடி செய்வதாக இணையதளம் பயன்படுத்துவோரின் 37 சதவிதம் பேர் புகார் செய்துள்ளனர் .
இந்தியாவை பொறுத்தவரை , ஆர்குட் , பேஸ்புக் , போன்ற இணையதளங்களை சாட்டிங்குக்கு பயன்படுத்துவோர் மற்றும் இ -மெயில் பெறுவோரின் அடையாளங்கள் அதிகளவில் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது . இணையதளங்களை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை அறிந்து கொண்டு , அதன் மூலம் பெரும் மோசடிகள் , குற்றங்கள் நடத்தப்படுகின்றன . அடையாளங்களைத் திருடியோர் , அதன் பிறகு அந்த இணைய தளத்தையே முடக்கிவிடும் நிலையும் ஏற்படுகிறது . இது தொடர்பாக சமிப காலமாக அதிகளவில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன .
சமீபத்தில் மும்பையை சேர்ந்த இளைனர் ஒருவர் இணைய தள நண்பன் மூலம் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் . இதைத் தொடர்ந்து , இது தொடர்பான விவகாரங்களில் சைபர் கிரைம் போலிசார் அதிக கவனம் செலுத்தத் துவங்கி உள்ளனர் .
பாஸ்வேர்டு , ATM PIN, உள்ளிட்ட அடையாளங்களைத் திருடி மோசடி செய்வோர் அதிகரித்து உள்ளனர். அதனால் இணையத்தில் பொருள் வாங்க விரும்புவோர் பாதுகாப்பாக வாங்கவும் .
0 comments